Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

ADDED : செப் 20, 2025 05:35 AM


Google News
மதுரை: ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மதுரை வழியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி செப். 22 முதல் அக். 20 வரை திங்கள் தோறும் இரவு 11:50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06151), மறுநாள் மதியம் 1:20 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 23 முதல் அக். 21 வரை செவ்வாய் தோறும் மதியம் 3:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06152), மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது.

இவ்விரு ரயில்களும் நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்கின்றன. 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு - திருநெல்வேலி செப். 26 முதல் அக். 26 வரை வெள்ளி, ஞாயிறு தோறும் அதிகாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06154), மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது. மறுமார்க்கத்தில், மதியம் 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06153), இரவு 11:55 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.

இவ்விரு பகல்நேர ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார் வழியாக செல்கின்றன. 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு 'ஏசி' சேர் கார், 12 சேர் கார்கள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

இவற்றுக்கான முன்பதிவு இன்று (செப். 20) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

திருவனந்தபுரம் கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழ்க்காணும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை - குருவாயூர் பகுதி ரத்து இன்று (செப். 20) காலை 11:35 மணிக்கு புறப்படும் மதுரை -குருவாயூர் ரயில் (16327), கொல்லத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், ரயில் (16328) நாளை மதியம் 12:10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மதுரை வரும். இவ்விரு ரயில்களும் கொல்லம் - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. திருவனந்தபுரம்-மதுரை 'அமிர்தா' ரயில் (16343), இன்று ஆலப்புழா வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக ஹரிபத், அம்பலபுழா, சேர்த்தலா, எர்ணாகுளம் சந்திப்பு ஸ்டேஷன்களில் நின்று செல்லும். வழக்கம் போல் இயங்கும் செப். 23ல் விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயங்கும் என அறிவிக்கப்பட்ட குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் (16128), அன்று வழக்கம்போல் மதுரை வழியாக இயங்கும். பகுதி ரத்து ஈரோடு - கரூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக செப். 19, 22, 25, 28, 30, அக். 3, 6ல் ஈரோடு - செங்கோட்டை - ஈரோடு ரயில்கள் (16845/16846), திண்டுக்கல் - கரூர் இடையே மட்டும் இயக்கப்படும். கரூர் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே செப். 30 வரை (செவ்வாய் தவிர்த்து) மேற்கண்ட இரு ரயில்களும் செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us