ADDED : அக் 24, 2025 02:33 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அடுத்த கொண்டையம்பட்டி இந்திரா நகர் கூலித்தொழிலாளி சதீஷ்குமாரின் மகள் சர்மிளா 16. அரசு பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி.
அக்.,19 இரவு வீட்டில் துாங்கிய போது பாம்பு கடித்தது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று காலை இறந்தார். மாணவியின் கண்களை பெற்றோர் தானம் செய்தனர்.


