ADDED : டிச 03, 2025 06:40 AM
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கு உதவி பேராசிரியர் பரமசிவன் தலைமையில் நடந்தது. துறைத் தலைவர் காந்திதுரை முன்னிலை வகித்தார். மாணவர் தினேஷ் வரவேற்றார்.
மாணவர்கள் பாண்டிசெல்வி, பிரவீனா, விஷ்ணு பல்வேறு தலைப்புகளில் கட்டுரை வாசித்தனர். மாணவர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியர்கள் உமாமகேஸ்வரி, சங்கீத்ராதா, ஒருங்கிணைப்பாளர்கள் நர்மதா, நாகஜோதி, குணசேகரன், வர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் தசரதன் நன்றி கூறினார்.


