/உள்ளூர் செய்திகள்/மதுரை/நெல் கொள்முதல் மையங்கள் தாமதமாகாது என்ற கலெக்டரின் வாக்குறுதி காற்றில் பறக்குதுநெல் கொள்முதல் மையங்கள் தாமதமாகாது என்ற கலெக்டரின் வாக்குறுதி காற்றில் பறக்குது
நெல் கொள்முதல் மையங்கள் தாமதமாகாது என்ற கலெக்டரின் வாக்குறுதி காற்றில் பறக்குது
நெல் கொள்முதல் மையங்கள் தாமதமாகாது என்ற கலெக்டரின் வாக்குறுதி காற்றில் பறக்குது
நெல் கொள்முதல் மையங்கள் தாமதமாகாது என்ற கலெக்டரின் வாக்குறுதி காற்றில் பறக்குது

வியாபாரிகளுக்கு லாபம்
குலமங்கலம், பூதகுடி விவசாயிகள் ராமசுப்ரமணி, பாலசுப்ரமணியம் கூறியதாவது: அக்., 3 ல் கலெக்டர், டி.என்.சி.எஸ்.சி. அதிகாரிக்கு கடிதம் அனுப்பினோம். மையம் திறப்பதற்கு ஆட்கள் இல்லை அதிகாரி கூறுகிறார். நெல்லை உற்பத்தி செய்வதை விட சரியான நேரத்திற்கு விற்பது தான் எங்களுக்கு பிரச்னையாக உள்ளது. மையம் திறக்கும் வரை, நெல்லை பாதுகாக்க கோடவுன் வசதியில்லை. வீட்டில் வைக்கும் அளவிற்கு இடமில்லை. மழை பெய்தால் நெல் நனைந்து வயலில் முளைத்து விடும் என பயந்து வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கிறோம். மையத்தில் 40 கிலோ மூடைக்கு ரூ.1000 தருகின்றனர். குலமங்கலம், பூதகுடி, கட்டக்குளம், வீரபாண்டி பகுதிகளில் நிறைய விவசாயிகள் நெல்லை அறுவடை செய்துள்ளோம். வியாபாரிகளிடம் 68 கிலோ மூடையை ரூ.1200க்கு விற்றோம். ஏற்று கூலி, வண்டி வாடகையை கணக்கிட்டால் எங்களுக்கு நஷ்டம் தான். எங்களிடம் நெல்லை வாங்கிய வியாபாரிகள், மையம் திறந்த பின் கொண்டு சென்று நல்ல விலை விற்று லாபம் பார்க்கின்றனர்.


