/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை
மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை
மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை
மகிழம்பூ குடியிருப்பில் மகிழ்ச்சி இல்லை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை

ரோடு வசதியே இல்லை
தனக்கன்குளம் ஊராட்சி விரிவாக்கப் பகுதியான இங்கு மகிழ்ச்சி நகர், ஜெயம் நகர், அபிஷேக் நகர், ரோஜா நகர், சமாதான நகர் உள்ளிட்ட பகுதிகள், 10 குறுக்குத் தெருக்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில், தென்பழஞ்சி - திருமங்கலம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கு முன் தார் ரோடு அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சமாதான நகரின் ஒரு குறுக்குத் தெருவில் மட்டும் 6 ஆண்டுகளுக்கு முன் 'பேவர் பிளாக்' ரோடு அமைக்கப்பட்டது. பல குறுக்குத் தெருக்கள் மண் ரோடாகவே உள்ளன.
குடம் குடிநீர் ரூ. 15
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு முன் கட்டிய அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருநாள் விட்டு ஒருநாள், அரை மணி நேரமே உப்பு தண்ணீர் வினியோகிக்கின்றனர். இதனால் குடிநீரை ரூ.15க்கு வாங்கும் அவலம் உள்ளது. தனக்கன்குளம் கண்மாயை துார்வாராததால் நிலத்தடி நீர் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. குடிநீர் வரியாக ஆண்டுக்கு ரூ.600 வசூலிக்கின்றனர். மேல்நிலை தொட்டி அமைத்து இப்பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
வடிகால் வசதி இல்லாததால் ரோட்டிலும், காலி மனைகளிலும் கழிவுநீர் தேங்குகிறது. தினமும் குப்பை சேகரிக்காததால் காலி மனைகளில் கொட்டுகின்றனர். அவை மட்கி துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறந்து பாதசாரிகள் மீது விழுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம் உள்ளது. உடனே குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும்.