Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

ADDED : ஜூன் 21, 2024 01:36 PM


Google News
மயிலாடுதுறை: சீர்காழி அருகே மின்கம்பி அருந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருமங்கலம் கன்னி கோயில்தெருவை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் அபினேஷ்.5. பள்ளி செல்வதற்காக குளிப்பதற்கு வீட்டின் கொல்லைக்கு சென்றார் அப்போது மின் கம்பி அறுந்து அபினேஷ் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மின் கம்பியை அகற்றி அபினேஷை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில்போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us