Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ நாகை மீனவர்களிடம் கொள்ளை

நாகை மீனவர்களிடம் கொள்ளை

நாகை மீனவர்களிடம் கொள்ளை

நாகை மீனவர்களிடம் கொள்ளை

ADDED : அக் 04, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், செருதுாரில் இருந்து, அக்., 1ம் தேதி சூரியமூர்த்தி, 55, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கில் 10 கடல் மைல் தொலைவில், 300 கிலோ மீன்பிடி வலையை கடலில் வீசிவிட்டு காத்திருந்தனர்.

அப்போது அப்பகுதிக்கு, அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட இரு பைபர் படகுகளில் ஏழு கடற்கொள்ளையர்கள் வந்தனர்.

சூரியமூர்த்தி படகில் இருந்தவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, படகில் இருந்த மீன்பிடி உபகரணங்களை தங்கள் படகுகளில் ஏற்றிக் கொண்டு, 300 கிலோ மீன்பிடி வலையையும் பறித்து சென்றனர். பொருட்களை இழந்த மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us