ADDED : ஜூன் 28, 2024 02:00 AM
நாமகிரிப்பேட்டை, போதை பழக்க தீமைகள் குறித்து, மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டையில் நடந்தது.
நாமகிரிப்பேட்டையில், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் போலீசார் இணைந்து போதை பழக்க தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இன்ஸ்பெக்டர் பிரபாவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஸ்.ஐ., குணசீலன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள், போதை பழக்கம் வேண்டாம் என்பதை விளக்கும்படி, பதாகைகளை பிடித்து வந்தனர். ஆத்துார் பிரதான சாலையில் பேரணி நடந்தது.