Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மஞ்சள் வரத்து 2 மடங்கு அதிகரிப்பு

மஞ்சள் வரத்து 2 மடங்கு அதிகரிப்பு

மஞ்சள் வரத்து 2 மடங்கு அதிகரிப்பு

மஞ்சள் வரத்து 2 மடங்கு அதிகரிப்பு

ADDED : ஜூன் 19, 2024 07:09 AM


Google News
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டையில், நேற்று நடந்த ஏலத்தில், இரண்டு மடங்கு மஞ்சள் விற்பனையானது.நாமகிரிப்பேட்டையில் கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.

தொடர் மழை காரணமாக மே மாதத்தில், 2 வாரம், ஜூன் மாதத்தில் ஒரு வாரம் மஞ்சள் ஏலம் நடக்கவில்லை. இந்நிலையில், நேற்று மஞ்சள் வரத்து கடந்த ஏலத்தை விட இரண்டு மடங்காக உயர்ந்தது. கடந்த வாரம், 250 மூட்டை மஞ்சள், 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 600 மூட்டைகள் விற்பனைக்கு வந்ததுடன், 55 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்றது. 2 மடங்கிற்கு அதிகமாக வரத்து அதிகரித்திருந்தது. நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 13,899 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 18,805 ரூபாய்க்கும் விற்பனையானது. உருண்டை ரகம் குறைந்தபட்சம், 12,809 ரூபாய்க்கும், அதிகபட்சம், 16,223 ரூபாய்க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சமாக, 5,069 ரூபாய்க்கும், அதிகபட்சம், 21,889 ரூபாய்க்கும் விற்பனையானது. விரலி, 430, உருண்டை, 150, பனங்காலி, 20 மூட்டை என, 600 மூட்டைகளும், 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us