Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் உழவர் சந்தையில் 61.20 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 61.20 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 61.20 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 61.20 டன் காய்கறி விற்பனை

ADDED : ஜூன் 16, 2025 07:33 AM


Google News
நாமக்கல்: நாமக்கல், கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறுவடை செய்து, இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

வழக்கமாக வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.தற்போது, திருமண விசேஷம், கோவில் திருவிழாக்கள் நடப்பதால், வழக்கத்தை விட நேற்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 201 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 47,430 கிலோ காய்கறிகள், 13,7500 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 61,200 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில், 26 லட்சத்து, 47,520 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us