Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு கலை கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை

அரசு கலை கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை

அரசு கலை கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை

அரசு கலை கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை

ADDED : மே 13, 2025 02:32 AM


Google News
நாமக்கல் :'தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான உதவி மையம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் துவக்கப்பட்டுள்ளது' என, கல்லுாரி முதல்வர் பொறுப்பு ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கும், 2025-26ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மையம், வரும், 27 வரை, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் செயல்படும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, இ-மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, கல்லுாரி வளாகத்தில் இயங்கும் சேவை மையத்தில், தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணமாக, 48 ரூபாய், பதிவு கட்டணம், இரண்டு ரூபாய் என, மொத்தம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு, பதிவு கட்டணமாக, இரண்டு ரூபாய் செலுத்தினால் போதும்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், இளநிலை கலை பிரிவில் துறைவாரியாக தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், வரலாறு தலா, 60 இடங்கள், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், தலா, 40 இடங்கள், புள்ளியியல், 24 இடங்கள் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ், 30 இடங்கள் உள்ளன.

இரண்டாவது ஷிப்டில் தலா, 60 இடங்கள் என, மொத்தம், 1,074 இடங்களுக்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us