Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆற்றில் மிதந்த சடலம் மீட்பு

ஆற்றில் மிதந்த சடலம் மீட்பு

ஆற்றில் மிதந்த சடலம் மீட்பு

ஆற்றில் மிதந்த சடலம் மீட்பு

ADDED : அக் 02, 2025 02:09 AM


Google News
பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் பகுதி ஆற்றில் சடலம் மிதப்பதாக, ஆற்றில் குளிக்க சென்ற பொதுமக்கள், நேற்று காலை பள்ளிப்பாளையம் போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த சடலத்தை மீட்டனர். இறந்து, 20 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகி காணப்பட்டது.

இறந்தது ஆணா? பெண்ணா? என கண்டுபிடிக்க முடியாத நிலையில் சடலம் காணப்பட்டது. மீட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us