Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஏமாற்றிய 'இன்ஸ்டா' காதல்: மணமான 3ம் நாளில் மாப்பிள்ளைக்கு 'ஷாக்'

 ஏமாற்றிய 'இன்ஸ்டா' காதல்: மணமான 3ம் நாளில் மாப்பிள்ளைக்கு 'ஷாக்'

 ஏமாற்றிய 'இன்ஸ்டா' காதல்: மணமான 3ம் நாளில் மாப்பிள்ளைக்கு 'ஷாக்'

 ஏமாற்றிய 'இன்ஸ்டா' காதல்: மணமான 3ம் நாளில் மாப்பிள்ளைக்கு 'ஷாக்'

ADDED : டிச 03, 2025 09:20 AM


Google News
Latest Tamil News
ப.வேலுார்: 'இன்ஸ்டா'வில் ஓராண்டாக காதலித்த பெண்ணை திருமணம் செய்த மூன்றாவது நாளில், அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததால், மணமகன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 34; பெங்களூரில் ஐ.டி., நிறுவன ஊழியர். திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே, சிவந்திபுரத்தை சேர்ந்த ராமசாமி - அமுதா தம்பதியரின் மகள் மகாஸ்ரீ, 42; சென்னையில் ஐ.டி., ஊழியர்.

ஸ்ரீதர், மகாஸ்ரீ இருவரும், 'இன்ஸ்டா'வில், ஓராண்டுக்கு முன் நண்பர்களாகினர். நாளடைவில் இருவரிடையே காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து, காதலை வளர்த்து வந்தனர்.

அப்போது, மகாஸ்ரீ, தனக்கு 30 வயது என்றும், இன்னும் திருமணமாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்கள் கடந்த பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஸ்ரீதரிடம், மகாஸ்ரீ வற்புறுத்தியுள்ளார். இதனால், காதல் குறித்து ஸ்ரீதர் தன் வீட்டில் தெரிவித்துள்ளார்.

முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின் சமாதானமடைந்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

நவ., 30ல், பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவிலில், ஸ்ரீதர் - மகாஸ்ரீ திருமணம் நடந்தது. இதில், மணமகள் வீட்டார் சார்பில், ஒருசிலரே கலந்து கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, தங்கள் திருமண புகைப்படங்களை, 'இன்ஸ்டா'வில் பதிவிட்டனர்.

இதைப் பார்த்த, மகாஸ்ரீயின் முதல் கணவரின் உறவினர்கள், புதுமண தம்பதியரை வலை வீசி தேடினர்.

நேற்று காலை, பாண்டமங்கலத்தில் உள்ள மாப்பிள்ளை ஸ்ரீதரின் வீட்டுக்கு காரில் வந்த முதல் கணவரின் உறவினர்கள், மகாஸ்ரீயை சரமாரியாக தாக்கினர்.

அப்போது, அப்பகுதி மக்கள் தடுத்து கேட்டபோது, 18 ஆண்டு களுக்கு முன்பே மகாஸ்ரீக்கு திருமணமாகி, 15 வயது மகள், 13 வயது மகன் இருப்பது தெரிய வந்தது. இதனால் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி யடைந்தனர்.

மேலும், திருமணமானதை மறைத்து, வயதை குறைத்து கூறி ஏமாற்றி திருமணம் செய்ததும், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள மகாஸ்ரீயின் பெற்றோர் பராமரிப்பில், இரண்டு குழந்தைகளும் இருப்பதும் தெரிய வந்தது.

அதிர்ச்சியில் இருந்து மீளாத புதுமாப்பிள்ளை வீட்டார், மகாஸ்ரீயை ஏற்க மறுத்து, 5 சவரன் தாலிக்கொடியை திரும்ப பெற்றனர். ப.வேலுார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us