Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மூடப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி: திறக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு

மூடப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி: திறக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு

மூடப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி: திறக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு

மூடப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி: திறக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 30, 2024 02:11 AM


Google News
‍சேந்தமங்கலம், சேந்தமங்கலம் ஆதிதிராவிடர் நலத்துறை ‍விடுதி மூடப்பட்டுள்ள நிலையில், அரசு கல்லுாரி மாணவர்கள் தங்கி படிக்க அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சேந்தமங்கலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் கொல்லிமலை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் வகையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், நைனாமலை சாலையில், கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் செலவில் அரசு மாணவர் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியில், முதலில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்தனர். நாளடைவில், மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பது குறைந்தது. இதனால், கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் வரை, 10 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி படித்ததால் விடுதி மூடப்பட்டது. அதன் பின், கடந்த, 2 ஆண்டாக ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிக்கு போதிய மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. எனவே, இந்த விடுதியில், அரசு கல்லுாரி மாணவர்கள் தங்கி படிக்க அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முருகன் கூறியதாவது:

கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், 10 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி படித்தனர். இதனால், குறைந்த அளவில் மாணவர்கள் தங்கி படித்ததால், விடுதி மூடப்பட்டது. இந்த விடுதியை, தற்போது சேந்தமங்கலம் அரசு கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள அரசிடம் ‍கேட்கப்பட்டுள்ளது. பதில் வந்ததும் இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us