Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

ADDED : அக் 06, 2025 04:11 AM


Google News
குமாரபாளையம்: குமாரபாளையம், ராஜம் தியேட்டர் பகுதியில், நேற்று மாலை, 7:00 மணிக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்-களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிர-சாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டி-ருந்தது.

கரூரில் நடந்த சம்பவத்தை அடுத்து, போதிய பாதுகாப்பு இல்-லையென நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்ததன் பேரில், இ.பி.எஸ்.,

பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, வரும், 8ல் பிரசார கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேடை அமைத்து பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்-படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து, குமாரபாளையம்--பள்ளிப்பாளையம் சாலையில் உள்ள சாணார்பாளையம் பகுதியில் கூட்டம் நடத்த, அ.தி.மு.க., சார்பில் அனு-மதி கோரப்பட்டுள்ளது. அப்பகுதியை, நேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.

இதில் ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன், குமார

பாளையம் நகர செயலர்

பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us