Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

ADDED : அக் 06, 2025 04:16 AM


Google News
பள்ளிப்பாளையம்: 'ஆவத்திபாளையம் பகுதி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளுக்கு தீ வைத்தால், போலீசில் புகாரளிக்கப்-படும்' என,

களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவித்துள்ளது.

பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்.,க்குட்பட்ட ஆவத்தி

பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை, துாய்மை பணியாளர்கள், ஆவத்திபா-ளையம் பகுதி ஆற்றங்கரையோரம் கொட்டுகின்றனர்.

மேலும், சமயசங்கிலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இருந்தம் குப்பை, கழிவுகள் இந்த ஆற்றோரத்தில் கொட்டுகின்றனர்.

இது தவிர தொழிற்சாலை கழிவுகளும், இரவில் வாகனத்தில் கொண்டு வந்து இங்கு கொட்டுகின்றனர். அவ்வாறு கொட்ட-படும் குப்பை, கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் அதிக-ளவில் சேர்ந்தவுடன் தீ வைத்துவிடுகின்றனர்.

இதனால், புகை மண்டலமாக மாறி, அருகில் உள்ள குடியிருப்-புக்கு புகை செல்வதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படு-கின்றனர்.

மேலும், புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, ஆற்றோரத்தில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளுக்கு தீ வைத்தால் சமபந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்-படும் அதனால், யார் தீ வைத்தாலும், பொதுமக்கள் தகவல் தர வேண்டும் என, களியனுார் பஞ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us