Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மின் மோட்டார் பழுதால் குடிநீர் சப்ளை இல்லை

மின் மோட்டார் பழுதால் குடிநீர் சப்ளை இல்லை

மின் மோட்டார் பழுதால் குடிநீர் சப்ளை இல்லை

மின் மோட்டார் பழுதால் குடிநீர் சப்ளை இல்லை

ADDED : மே 15, 2025 01:57 AM


Google News
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட எலந்தகுட்டை பஞ்., காட்டுப்பாளையத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு பஞ்சாயத்து மூலம் நிலத்தடி நீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 20 நாட்களுக்கு முன் மின்மோட்டார் பழுதாகி விட்டது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பணியாளர்கள் மின் மோட்டாரை சரி செய்ய, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், 20 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us