ADDED : மே 09, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
நாமகிரிப்பேட்டை:ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில், வடிவேல் அவரது மனைவி கவிதா வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், கூண்டு அமைத்து கோழிகளை வளர்த்து வருகின்றனர். நேற்று, கூண்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு ஒன்று, அங்கிருந்த கோழிகளை விழுங்க தொடங்கியது.
காலை, 8:00 மணி அளவில் கோழிகளுக்கு தீவனம் வைப்பதற்காக கவிதா சென்றார். அப்போது கூண்டுக்குள் மலைப்பாம்பு ஒன்று கோழிகளை தின்றுவிட்டு வெளியே செல்ல முடியாமல் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.





