Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தி.மு.க., நிர்வாகி வாரிசுகளுக்கு உதவித்தொகை

தி.மு.க., நிர்வாகி வாரிசுகளுக்கு உதவித்தொகை

தி.மு.க., நிர்வாகி வாரிசுகளுக்கு உதவித்தொகை

தி.மு.க., நிர்வாகி வாரிசுகளுக்கு உதவித்தொகை

ADDED : ஜூன் 16, 2025 07:31 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உயர் கல்விக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், எம்.பி., ராஜேஸ்குமார், ஐந்து ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கி வருகிறார். அதன்படி, வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள், பி.எல்.ஏ-., 2 ஆகியோரின் வாரிசுகளில், உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், 62 மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராமசுவாமி, துரைசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us