Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை

நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை

நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை

நகை, பணம் திருட்டு ;போலீசார் விசாரணை

ADDED : அக் 13, 2025 02:05 AM


Google News
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு அருகே, சின்னதம்பிபாளையம், பாப்பாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், 81, பெரியம்மாள், 76, தம்பதியர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு, 2:00 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம்கேட்டு எழுந்து பார்த்துள்ளனர்.

அப்போது, முகமூடி அணிந்த, மூன்று பேர் திடீரென அவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த தம்பதியினர், நேற்று காலை, 7:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது மேஜை டிராயரில் இருந்த, ஒரு பவுன் மோதிரம், 5,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தம்பதியர் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us