Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு

ADDED : அக் 05, 2025 01:08 AM


Google News
ராசிபுரம், 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திருக்குறள் திட்டத்தின், 7வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளரும், ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளருமான பெரியசாமி தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.

எலச்சிப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், பயிற்சியளித்தார். சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி மகாலிங்கம், மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். முதன்மை கருத்தாளர் தட்சிணாமூர்த்தி, வாகை மனோஜ் குமார் இருவரும், 22வது அதிகாரம் ஒப்புரவு அறிதல், 23 வது அதிகாரம் ஈகை ஆகியவற்றை நகைச்சுவை கதைகளுடனும் நாடகத்தின் வாயிலாகவும், நடிப்பின் வாயிலாகவும் குழந்தைகளுக்கு இசையுடன் கற்றுத்தந்தனர்.

திருக்குறளின் மேன்மை குறித்தும், தீவினையெச்சம் புறங்கூறாமை குறித்து கதைகள் வாயிலாகவும் செயல்பாட்டின் வாயிலாகவும் அறிமுகம் செய்தார். தமிழ் சங்கத்தின் பொருளாளர் ரீகன், இணைச்செயலாளர் இருசப்பன், தகவல் தொழில்நுட்ப தலைவர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us