Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேணுகோபால் சுவாமி தேரோட்டம ் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

வேணுகோபால் சுவாமி தேரோட்டம ் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

வேணுகோபால் சுவாமி தேரோட்டம ் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

வேணுகோபால் சுவாமி தேரோட்டம ் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

ADDED : பிப் 25, 2024 04:00 AM


Google News
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், நேற்று வேணுகோபால் சுவாமி கோவில் தேர் உற்சவம் நடந்தது.

நாமகிரிப்பேட்டையில், வரலாற்று சிறப்பு மிக்க ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் மற்றும் ரத உற்வசம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ரத உற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. புரோகிதர்கள் மந்திரம் முழங்க, பக்தர்கள் முன்னிலையில் வேணுகோபால் சுவாமி, ருக்மணி, சத்யபாமா சுவாமிகளுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை குதிரை வாகனத்தில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை, 9:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு திருத்தேரோட்டம் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அன்பழகன், பாலசுப்ரமணி, சேஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் அதிகம் பேர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடைவீதி, ஆத்துார் பிரதான சாலை, பேளுக்குறிச்சி ரோடு, பிள்ளையார் கோவில் வீதி, தேர்வீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us