/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேடப்படும் குற்றவாளிகள் ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு தேடப்படும் குற்றவாளிகள் ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
தேடப்படும் குற்றவாளிகள் ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
தேடப்படும் குற்றவாளிகள் ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
தேடப்படும் குற்றவாளிகள் ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
ADDED : ஜூன் 17, 2025 02:04 AM
நாமக்கல், சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டை புதிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மணி, ராஜேஸ், 25; இவர்கள் மீது, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், மணி, ராஜேஸ் இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
அதனால், நீதிமன்றம் மணி, ராஜேஸ் இருவரையம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 'வரும், ஜூலை, 14 காலை, 10:00 மணிக்குள், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால், போலீசார் அவரை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.