Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தடுப்பணையில் சீறிப்பாயும் தண்ணீர்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தடுப்பணையில் சீறிப்பாயும் தண்ணீர்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தடுப்பணையில் சீறிப்பாயும் தண்ணீர்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தடுப்பணையில் சீறிப்பாயும் தண்ணீர்

ADDED : ஜூலை 03, 2025 01:43 AM


Google News
பள்ளிப்பாளையம், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஓடப்பள்ளி தடுப்பணையில் நுரை பொங்க தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டியதால், அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. வெள்ளப்பெருக்கால், இந்த தடுப்பணை வழியாக, நுரை பொங்க தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதை, தடுப்பணை பாலத்தில் செல்வோர் பார்த்து ரசித்து, மொபைலில் செல்பி எடுத்து செல்கின்றனர்.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை செய்யப்பட்ட எச்சரிக்கை பலகை வைத்து, கயிறு கட்டப்பட்டு, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us