Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சுடுநீர் கொட்டி தொழிலாளி பலி

சுடுநீர் கொட்டி தொழிலாளி பலி

சுடுநீர் கொட்டி தொழிலாளி பலி

சுடுநீர் கொட்டி தொழிலாளி பலி

ADDED : அக் 13, 2025 02:06 AM


Google News
குமாரபாளையம்;உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாச்சுராய், 30; கூலித்தொழிலாளி. இவர், குமாரபாளையம், பெராந்தர்காடு பகுதியில் உள்ள டையிங் ஆலையில் வேலை செய்து வந்தார். கடந்த, 8 மாலை, 6:30 மணியளவில், மெசின் அழுத்தத்தை குறைத்து வால்வை திறப்பதற்கு பதிலாக, அழுத்தத்தை குறைக்காமல் வால்வை திறந்து விட்டுள்ளார்.

அப்போது, அதிலிருந்த சுடுநீர் முழுவதும், பாச்சுராய் மீது கொட்டியது. இதனால் வலியில் துடித்த அவரை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு இறந்தார். குமாரபாளையம் போலீசார்

விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us