கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
ADDED : ஜன 16, 2024 11:13 PM
பந்தலுார்;பந்தலுார் அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பந்தலுார் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்,60. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகே உள்ள பொது குடிநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடலை மீட்டு பந்தலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


