Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேயிலை தோட்டங்களில் மகசூல் விலை கிடைக்காததால் ஏமாற்றம்

 தேயிலை தோட்டங்களில் மகசூல் விலை கிடைக்காததால் ஏமாற்றம்

 தேயிலை தோட்டங்களில் மகசூல் விலை கிடைக்காததால் ஏமாற்றம்

 தேயிலை தோட்டங்களில் மகசூல் விலை கிடைக்காததால் ஏமாற்றம்

ADDED : டிச 05, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில், போதிய விலை இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 முதல், 22 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.

இடுப்பொருகளுக்கு, இருமடங்கு விலையேற்றம் கூலி உயர்வு மற்றும் தோட்டப்பராமரிப்பு செலவினம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மேகமூட்டமான காலநிலை நிலவினாலும் அவ்வப்போது வெயில் அடித்து வருவது, உரம் இட்டு பராமரித்த தேயிலை தோட்டங்களுக்கு உகந்ததாக உள்ளது.

இதனால், தோட்டங்களில் அரும்பு துளிர்விட்டு, மகசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், கட்டுப்படியான விலை கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us