/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்
நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்
நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்
நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்

'ரேடியோ காலர்' திட்டம்
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், ஆண் வரையாடுக்கு, தனியார் அமைப்பு சார்பில் ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்தனர். ஜூலை மாதம், மாமிச உண்ணி தாக்கி அந்த ஆடு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.தொடர்ந்து, டிச., 6ம் தேதி, மேலும், இரண்டு வரையாடுகளுக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தினர். அப்போது பெண் வரையாடு மயக்கம் தெளியாமல் உயிரிழந்தது. அதன் வயிற்றில் மூன்று மாத குட்டியும் இருந்தது. 'உள் உறுப்புகள் பலவீனமடைந்து, இறந்தது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
இறந்த மூன்றாம் வரையாடு
ரேடியோ காலர் பொருத்தப்பட்ட மற்றொரு ஆண் வரையாட்டின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த, 10ம் தேதி இணையதளம் வழியாக கண்காணித்த போது, வரையாடு நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
அரசு நடவடிக்கை அவசியம்
கூடலுார் பிரகதி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரான கால்நடை டாக்டர் சுகுமாரன் கூறுகையில், ''நீலகிரி வரையாடுகள் பயந்த சுபாவம் கொண்டவை. இவைகளுக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டாலும் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. இதனால், ரேடியோ காலர் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஜூன் முதல் ஆக., வரை இனப்பெருக்க காலமாகும். டிச., ஜன., மாதங்கள் பிரசவ காலமாகும்.


