Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வாகனம் மோதி யானை பலி

வாகனம் மோதி யானை பலி

வாகனம் மோதி யானை பலி

வாகனம் மோதி யானை பலி

ADDED : ஜன 02, 2024 10:40 PM


Google News
பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாட்டில் கோழிக்கோடு -கொல்லேகால் தேசிய நெடுஞ்சாலையில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கல்லுார் பகுதி அமைந்துள்ளது.

வனத்திற்கு மத்தியில் உள்ள சாலையில், கடந்த டிச., 4 ம் தேதி சாலையில் நடந்து சென்ற யானை மீது, சபரிமலைக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் காயமடைந்தது.அதில், யானையின் கால், முதுகு பகுதிகளில் காயமடைந்தது. 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர் கும்கி யானைகள் உதவியுடன், சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், 30 வயதுடைய ஆண் யானை வனப்பகுதியில் உயிரிழந்தது. வனத்துறை விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us