Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சரிவிலிருந்து விழுந்து பெண் யானை பலி

சரிவிலிருந்து விழுந்து பெண் யானை பலி

சரிவிலிருந்து விழுந்து பெண் யானை பலி

சரிவிலிருந்து விழுந்து பெண் யானை பலி

ADDED : செப் 01, 2025 10:09 PM


Google News
கூடலுார்; முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம் சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட, நார்தன்ஹே வனப்பகுதியில், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது, கிளன்மார்க்கன் டவர் அருகே, காட்டு யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது.

அதன் உடலை மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தனபால், ஊழியர்கள் ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், உடலை பிரேதபரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 50 வயது இருக்கும். வயதுமுதிர்வு மற்றும் சரிவிலிருந்து விழுந்துஅடிப்பட்டு இறந்திருக்கலாம்.

ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு, பரிசோதனை முடிவு கிடைத்த பின், வேறு காரணம் இருப்பின் தெரியவரும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us