/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் தொடரும் மழையால் தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்! தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை அவசியம்

15 கூட்டுறவு தொழிற்சாலைகள்
மாவட்டத்தில்,15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் இலையை வினியோகித்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதமான காலநிலை நிலவி வருகிறது.
உர தேவை அதிகரிப்பு
இந்நிலையில், தேயிலை, மலை காய்கறி தோட்டங்களை பராமரிக்க விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர். குறிப்பாக, தேயிலை தோட்டங்களில், 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ்' உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் உரத் தேவையை கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில், 2,500 டன் அளவுக்கு உரங்கள் இருப்பு வைத்தால் விவசாயிகளுக்கு தடையின்றி தேவைக்கேற்ப உர மூட்டைகளை வழங்க முடியும். தற்போது, தேயிலை, மலை காய்கறி தோட்டங்களை பராமரித்து வருவதால், உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்கினால் மட்டுமே தேயிலை, காய்கறிகள் தரமாக விளைந்து, அதிக மகசூலை தரும், விவசாயிகளுக்கும் நஷ்டம் இல்லாத விற்பனை நடக்கும்.