Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மூத்தோருக்கான கால்பந்து போட்டி திருப்பூரில் ஊட்டி அணி வெற்றி

மூத்தோருக்கான கால்பந்து போட்டி திருப்பூரில் ஊட்டி அணி வெற்றி

மூத்தோருக்கான கால்பந்து போட்டி திருப்பூரில் ஊட்டி அணி வெற்றி

மூத்தோருக்கான கால்பந்து போட்டி திருப்பூரில் ஊட்டி அணி வெற்றி

ADDED : ஜன 29, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூரில் நடந்த மூத்தோருக்கான கால்பந்து இறுதி போட்டி, டைபிரேக்கரில் முடிந்தது; ஊட்டி புளூஸ் அணி வெற்றி பெற்றது.

திருப்பூர் கால்பந்து கிளப் சார்பில், கால்பந்து போட்டி, அனுப்பர் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, ஜன., 26 ம் தேதி துவங்கியது. சென்னை, கோவை, மதுரை, கோவில்பட்டி, இளையாங்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், ஊட்டி, புதுச்சேரி உள்ளிட்ட 12 அணிகள் போட்டிகளில் பங்கேற்று விளையாடின.

மூன்று நாட்களாக பொதுபிரிவு, மூத்தோர் அணிகளுக்கு லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடந்தன.

நேற்று, இறுதி போட்டிகள் நடந்தது; பொதுப்பிரிவுக்கான இறுதி போட்டியில், மவுண்ட் லிட்ரசி அணி, 5 - 4 என்ற கோல் கணக்கில், நீலகிரி புளூ அணியை வென்றது.

வெட்ரன்ஸ், ஊட்டி புளூஸ் - திருப்பூர் 7எஸ் வெட்டரன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, 0 - 0 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கரில் நிறைவு பெற்றது.

கூடுதல் நேரம் வழங்கப்பட்டதில், 1 - 0 என்ற கோல் கணக்கில், ஊட்டி புளூஸ் அணி, வெற்றி பெற்றது.

வென்ற அணிக்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் கோப்பையை வழங்கினர்.

மூன்றாவது இடத்தை மதுரை அணியும், நான்காவது இடத்தை திருப்பூர் அணியும் பெற்றது. சிறந்த வீரர், சிறந்த கோல்கீப்பர், தடுப்பு ஆட்டக்காரருக்கு, பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us