/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி
'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி
'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி
'ராம்சார்' பட்டியலில் 'லாங்வுட்' சோலை நீல மலைக்கு அங்கீகாரம்! இதுவரை பாதுகாத்த மக்களுக்கு மகிழ்ச்சி

வெளிநாட்டு பறவைகள் வருகை
இந்த சோலைக்கு, 14 வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வலசை வருவது தொடர்கிறது. இந்த காடுகளை, 55 வகையாக அறிவியலாளர்கள் பகுத்துள்ளனர். இங்குள்ள மரவகைகள், 20 மீட்டர் உயரம் வரை வளர்ந்து பின்னர், நிழற்குடையாக விரிவது இச்சோலை காட்டின் சிறப்பம்சம். இதன் காரணமாக, இங்கு பெய்யும் மழையில், 75 சதவீதம் நீரை பூமியில் சேமித்து வைத்து, கோடை காலத்தில் சிறு, சிறு ஊற்றுகளாக குடிநீராக வெளியேறி வருவதால், உள்ளூர் மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.
உலகளவிலான அங்கீகாரம்
இது போன்ற பல சிறப்பம்சங்களை கருத்தில் கொண்ட மாநில அரசு, இந்த சோலையை உலக பல்லுயிர் சூழல் மையமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசு காமன் வெல்த் நாடுகளுக்கான, 'அரசியின் நிழற்குடை' என்ற உலக அளவிலான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. தற்போது, இந்த சோலை, 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லாங்வுட் சோலை, உலகளவில் முக்கிய மழைகாடு என்ற உன்னதத்தை பெற்றுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் 'ஹாட்ஸ்பாட்' என்ற முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
'தினமலர் பாராட்டுக்குரியது'
லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ கூறுகையில், ''லாங்வுட் சோலை போன்ற காடுகள், ஒரு எக்டர் பரப்பில் வினாடிக்கு, 750 லிட்டர் நீரை தரும்,' என, ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


