Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனத்துறை வாகனத்தை விரட்டிய காட்டு யானை

வனத்துறை வாகனத்தை விரட்டிய காட்டு யானை

வனத்துறை வாகனத்தை விரட்டிய காட்டு யானை

வனத்துறை வாகனத்தை விரட்டிய காட்டு யானை

ADDED : அக் 07, 2025 12:02 AM


Google News
Latest Tamil News
கூடலுார்;முத்துமலை அருகே, கர்நாடக பந்திப்பூர் வனப்பகுதியில், வனத்துறை வாகனத்தை காட்டு யானைகள் விரட்டியதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர், வாகன மூலம் வனப்பகுதிக்கு சவாரி அழைத்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுற்றுலா பணிகள் அழைத்து சென்ற வனத்துறை வாகனத்தை, காட்டு யானை திடீரென விரட்டியது. பயணிகள் அச்சமடைந்தனர். ஓட்டுனர், சதுர்யமாக வாகனத்தை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது துாரம் அந்த வாகனத்தை விரட்டி சென்ற யானை, பின் வனப்பகுதிக்குள் சென்றது. சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us