Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 29 ல் கொடியேற்றம்  

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 29 ல் கொடியேற்றம்  

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 29 ல் கொடியேற்றம்  

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 29 ல் கொடியேற்றம்  

ADDED : ஜூலை 27, 2024 05:10 AM


Google News
திருவாடானை, : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29 காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.6ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தோற்ஸவம் யாக கும்பாபிேஷகம் ஆக.8 ல் அம்பாள் தபசு, மறுநாள் திருக்கல்யாணம், ஆக.11 ல் சுந்தரர் கைலாய காட்சி, மறுநாள் உற்ஸவ சாந்தி நடக்கிறது.

விழா நாட்களில் கேடயம், பல்லக்கு, காமதேனு, அன்னம், கிளி, வெள்ளி ரிஷபம் போன்ற பல வாகனங்களில் சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us