/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2024 05:37 AM
திருவாடானை : அரசு உதவி பெறும் தொடக்கபள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் காலை உணவு விரிவாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் பள்ளியில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவக்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றியத் தலைவர் முகமதுமுக்தார் உட்பட பலர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து காரங்காடு, எட்டுகுடி, அரியப்புவயல், தொண்டி, ஓரியூர், ஆண்டாவூரணி, கெங்கைவிலாசம், நெடுமரம், குருமிலான்குடி, நகரிகாத்தான், ஓரிக்கோட்டை, பிராந்தன்வயல் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கபள்ளிகளில் திட்டம் துவங்கப்பட்டது.