ADDED : ஜூலை 16, 2024 05:43 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் குடியிருப்பு பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., தினேஷ்பாபு தலைமையில் அங்கு விசாரணை நடத்தினர். இதில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் மனைவி சங்கீதா 38, கீழக்கரை அண்ணாநகர் தினேஷ்குமார் மனைவி சவுமியா 28, கீழக்கரை அன்பு நகர் மணிகண்ட பிரபு 22, ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.