Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து 110 பவுன் நகைகள் கொள்ளை

ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து 110 பவுன் நகைகள் கொள்ளை

ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து 110 பவுன் நகைகள் கொள்ளை

ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து 110 பவுன் நகைகள் கொள்ளை

ADDED : செப் 30, 2025 08:04 AM


Google News
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மீனவர் வீட்டு பூட்டை உடைத்து 110 பவுன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.

உச்சிப்புளி அம்மாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் மங்களூருவில் விசைப்படகு ஓட்டுநராக வேலை செய்கிறார். இவரது மகள் தீபிகாவுக்கு தாமரைக்குளம் சீனிவாசனுடன் ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது. அவ்வப்போது மாமனார் கனகராஜ் வீட்டிற்கு வந்து தங்கி செல்வார்கள்.

நேற்று முன்தினம் அம்மாபட்டினத்தில் இருந்து மனைவி, மாமியார் வெள்ளையம்மாளுடன் சீனிவாசன் தாமரைக்குளம் சென்றார். மூவரும் மீண்டும் நேற்று மதியம் அம்மாபட்டினம் வந்தனர். வீட்டின் முன் பக்க கேட் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே பீரோவை உடைத்து தீபிகாவின் 110 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் ரேகை பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us