/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம் சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
ADDED : மே 14, 2025 01:01 AM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் அதிகாலை 3:20 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து தல்லாகுளத்தில் சேர்க்கையாகிய பெருமாள், காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார்.
பின்னர் மகா தீபாராதனைகள் நடந்து காலை 9:35 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலை அழகர் அடைந்தார். அதேபோல் வைகை ஆற்று மணலில் 3 கி.மீ.,க்கு ஆயிரம் பொன் சப்பரத்தை இழுத்து வண்டியூரை அடைந்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு கள்ளழகர் சேஷ வாகனத்தில் அலங்காரமாகினார்.
மகா தீபாராதனைநடந்து, மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு வைகை ஆற்றை நோக்கி மீண்டும் புறப்பட்டார். அங்கு மட்டா மண்டகப்படியில் அழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கினார். தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு வாணியர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.