Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது 

வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது 

வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது 

வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது 

ADDED : அக் 18, 2025 03:43 AM


Google News
தொண்டி: தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது.

தொண்டி மகாசக்தி புரத்தை சேர்ந்தவர் மீனவர் துாண்டிய்யா. இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரின் மகன்கள் ராம்குமார், ராஜசேகர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 20 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

ஆமையை வலையில் இருந்து எடுத்து உயிருடன் கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி ஆமையை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us