Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 78 கிலோ கஞ்சா கடத்தல் மேலும் ஒருவர் கைது

78 கிலோ கஞ்சா கடத்தல் மேலும் ஒருவர் கைது

78 கிலோ கஞ்சா கடத்தல் மேலும் ஒருவர் கைது

78 கிலோ கஞ்சா கடத்தல் மேலும் ஒருவர் கைது

ADDED : அக் 02, 2025 04:01 AM


Google News
Latest Tamil News
திருவாடானை : தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 78 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூலை 5ல் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக நின்ற இருவரை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடையில் கஞ்சா பார்சல்கள் இருந்தன. ரூ.80 லட்சம் மதிப்புள்ள 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் தெற்கு தெருவைச் சேர்ந்த மாது 31, தொண்டி அருகே புதுக்குடியைச் சேர்ந்த சமயக்கண்ணு 24, வட்டாணம் புதுக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை 28, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய நான்கு பேரை தேடிவந்தனர். இவ்வழக்கில் தஞ்சாவூரில் பதுங்கியிருந்த தொண்டியைச் சேர்ந்த மலுங்குமஸ்தானை 29, போலீசார் நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us