ADDED : மே 25, 2025 05:12 AM

திருவாடானை : திருவாடானை அருகே கீழ்ப்புலி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
பழங்குளம், கீழ்ப்புலி கிராமங்களை சேர்ந்த பெண்கள் கோயில் வளாகத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பூஜைக்கு தேவையான எண்ணெய், பூ, பழம், தேங்காய், உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.