Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி துவங்கிய விவசாயிகள் எதிர்பார்ப்பு! மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி துவங்கிய விவசாயிகள் எதிர்பார்ப்பு! மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி துவங்கிய விவசாயிகள் எதிர்பார்ப்பு! மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி துவங்கிய விவசாயிகள் எதிர்பார்ப்பு! மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ADDED : அக் 02, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2024-25) சம்பா பருவகாலத்தில் மழையால் சேதமடைந்த நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்குரிய நிவாரணத்தொகை இதுவரை வழங்கப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடப்பாண்டில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளதால் நிவாரணத் தொகையை விரைவில் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். மாவட்டத்தில் மானாவாரியாக கண்மாய் பாசனத்தில் 3 லட்சம் ஏக்கரில் நெல் மற்றும் 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது.

வடகிழக்கு பருவ மழையை நம்பி தற்போது வயல்களை தயார் செய்து நெல் விதைத்தும், மிளகாய் சாகுபடியில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2024 நவ., முதல் டிச., வரை மழை பெய்தது. கண்மாய், ஊருணி நிரம்பி வரத்துகால்வாய்கள் பரா மரிப்பின்றி ராமநாதபுரம், நயினார்கோவில், சிக்கல், முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் வயல் வெளியில் குளம்போல தண்ணீர் தேங்கியது.

இதனால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் நெல், மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு ரூ. பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வருவாய்த் துறையினர், வேளாண் துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி வரை நிவாரணம் கேட்டு தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பியுள்ளனர். இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு கூறுகையில், பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றனர். ஆனால் 2024 டிச., 2025 ஜன., மழையால் சேத மடைந்த பயிர்களுக்கு இது வரை நிவாரணம் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் விரைவில் வந்து விடும் என்கின்றனர்.

நடப்பு ஆண்டில் சம்பா நெல் சாகுபடியில் விவ சாயிகள் நெல் விதைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பயிர் களுக்குரிய வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us