ADDED : டிச 04, 2025 05:36 AM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பிரதோஷ காலங்களில் பக்தர்களுக்கு முதுகுளத்துார் சதுரகிரி பக்தர்கள் வழிபாட்டு குழு சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. தரிசனம் முடிந்து வரக்கூடிய பக்தர்களுக்கு பொங்கல், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்டவைகள் வழங்கப்படு கிறது.
தலைமை குருநாதர் முத்துராஜ், திருக்குமரன், மனோகரன் உள்ளிட்ட சிவநெறி பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


