ADDED : அக் 11, 2025 04:05 AM
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இலவசமாக நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் கவாஸ்கர் வழங்கினார். மாணவர்களின் பெற்றோர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


