/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 25, 2025 11:25 PM

பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசியை சேர்ந்தவர்கள் விஜயபிரபாகரன் 25, அபிஷேக் 21. இருவருக்கும் இடையே தகராறு இருந்த நிலையில் 2023ம் ஆண்டு அக்கிரமேசி ஊருணி கரையில் விஜயபிரபாகரனின் கையை அரிவாளால் அபிஷேக் வெட்டினார்.
அப்போது இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் அபிஷேக் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கில் நேற்று அபிஷேக்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி அறிவு தீர்ப்பளித்தார்.