Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கலெக்டர் அலுவலக கடைக்குள்புகுந்த குரங்கு:  மக்கள் அச்சம்

கலெக்டர் அலுவலக கடைக்குள்புகுந்த குரங்கு:  மக்கள் அச்சம்

கலெக்டர் அலுவலக கடைக்குள்புகுந்த குரங்கு:  மக்கள் அச்சம்

கலெக்டர் அலுவலக கடைக்குள்புகுந்த குரங்கு:  மக்கள் அச்சம்

ADDED : அக் 09, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடைக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த ரொட்டியை எடுத்துச் சென்றது. குடியிருப்பு பகுதியில் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம்காத்தான், ராமநாதம் நகரில் குரங்குகள் திரிகின்றன. இவை தென்னை மரங்களில் ஏற்றி காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் நேற்று தினமலர் நகர், மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் இரண்டு குரங்குகள் வீடுகளில் காம்பவுண்ட் சுவர், தென்னை மரங்களில் தாவிக் குதித்தன.

நேற்று மதியம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்கு ஒன்று டூவீலர்களில் ஏறி குதித்தும், உழவர் அங்காடி கடைக்குள் நுழைந்து பாட்டிலில் இருந்த ரொட்டியை எடுத்துச் சென்றது.ஆகையால் ராமநாதபுரம் குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us