ADDED : அக் 06, 2025 05:44 AM
கமுதி : கமுதி அருகே அபிராமம் சாந்த கணபதி கோயிலில் உள்ள சுயம்புலிங்க துர்கை அம்மனுக்கு நவராத்திரி சிறப்புபூஜை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.
சுயம்புலிங்க துர்கை அம்மன், சாந்த கணபதிக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து அபிராமம் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி துாக்கி சென்று தண்ணீரில் கரைத்தனர்.
அப்போது பெண்கள் கும்மி அடித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


