Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்

ராமேஸ்வரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்

ராமேஸ்வரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்

ராமேஸ்வரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்

ADDED : அக் 01, 2025 09:12 AM


Google News
ராமேஸ்வரம் : - ராமேஸ்வரத்தில் இரு டூவீலர்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

ராமேஸ்வரம் அருகே அக்காள்மடத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் 26. இவர் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் வெல்டிங் வேலை முடித்து விட்டு டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பனை சேர்ந்த பரீத் 21, ஜின்னா 25, இருவரும் டூவீலரில் ராமேஸ்வரம் நோக்கி வந்தனர்.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இரு டூவீலரில் சென்றவர்களும் எதிர்பாராமல் மோதி கொண்டனர். இதில் ஜெயசீலன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us