Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல் ஒருவர் சிக்கினார்; மூவர் ஓட்டம்

இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல் ஒருவர் சிக்கினார்; மூவர் ஓட்டம்

இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல் ஒருவர் சிக்கினார்; மூவர் ஓட்டம்

இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல் ஒருவர் சிக்கினார்; மூவர் ஓட்டம்

ADDED : அக் 05, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இரவு 9:00 மணிக்கு சக்கரக்கோட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சி குப்பை கிடங்கு அருகே ஒரு குடிசையை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசார் கண்டதும் அங்கிருந்த நால்வர் தப்ப முயன்றனர்.

அவர்களில் தேவிப்பட்டினம் மணல்வாடி தெருவைச் சேர்ந்த ஷாஜகானை 48, மட்டும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் அவர் கூறியதாவது: தேவிப்பட்டினம் கடற்கரையில் மீனவர்களிடம் ஒரு கடல் அட்டை ரூ.30 க்கு வாங்கி இலங்கைக்கு கடத்த வேக வைத்து தயார் செய்தோம் என்றார். குடிசையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கடல் அட்டைகள், ஒரு டூவீலர் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பிச் சென்ற முள்ளிக்குடி விஜய், கீழக்கரை முசம்மில் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பின் கடல் அட்டைகளை போலீசார் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us